அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 27-07-2018 பகுதி: 60 அன்பு நண்பர்களே... .. வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு , அதிலும் த மிழர்களுக்குக் கிடையாது . '' ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள்வாழ்கிறான் . அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்துவைக்க வேண்டும்என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும் ” என்பதை நாடோறும் வற்புறுத்தியநாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே . ஆனைமுத்து அவர்கள் குறிப்பிடுவார் . சென்ற தொடரில் தியாகிகள் பூங்காவின் தெற்குப் பகுதியில் நின்று இருந்தோம். இ...