தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 27-வானமே வழிகாட்டி
வானமே வழிகாட்டி ( காற்று , சூரியன் , நட்சத்திரம் – கடலோடியின் கருவிகள் ) இன்றைக்கு சாலையில் பயணிக்கும் மகிழுந்துகள் முதல் ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள் வரை , GPS எனப்படும் ‘ புவி இடங்காட்டி ’ கருவிகள் இன்றி இயங்குவதையே கற்பனை செய்ய முடியாத நிலையில் நாம் வாழ்கிறோம் . நாம் எங்கு இருக்கிறோம் , எந்த இடத்திற்குச் செல்கிறோம் , எந்த வழி விரைவானது , எவ்வளவு நேரத்தில் சென்று சேரலாம் என்பதனைத் துல்லியமாகக் காட்டும் இந்தக் கருவிகளை அறிவியலின் உச்சக் கண்டுபிடிப்புகள் என்று சொல்லலாம் . தரையில் பயணிப்பவர்களை விட , திக்குத் தெரியாத பெருங்கடல்களையும் ஆகாயத்தையும் கடப்பவர்களுக்கு இவை இன்றியமையாததாக மாறிவிட்டன . ஒரு படி மேலே சொன்னால் , இத்தகைய கருவிகள் இல்லாமல் கலம் செலுத்தும் பயணம் (Navigation) சாத்தியமே இல்லை என்ற எண்ணமே இன்று நம்மை ஆட்கொண்டிருக்கிறது . இந்த நவீன தொழில்நுட்பங்கள் வாழ்க்கையை எளிமையாக்கியதோடு மட்டுமல்லாமல் , மனிதனின் ஆய்ந்து அறியும் திறனை பிற துறைகளில் செலுத்தவும் வழிவகுத்துள்ளன . ஆனால் இத்தகைய தொ...