அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 26 -தை அமாவாசை -இராமேசுவரம்
தை அமாவாசை -இராமேசுவரம் இளங்கலை வணிகவியல் இறுதி வருடம் . சமூக பொருளாதாரத் தட்டுகளி ன் பல்வேறு நிலைகளில் இருக்கும் மாணவர்க ளையும் நட்பு எனும் ஒரு அழகிய அச்சில் அனைவரையும் வைத்து இருக்கும் கல்லூரி வாழ்வு . உல்லாசச் சுற்றுலா என்றால் அனைத்து மாணவர்களு க்கும் இயன்ற வரை அருகே எங்காவது அருகில் இருக்கும் இடத்துக்கு குறைந்த செலவில் சென்று வருவது அன்றைய வழக்கம் . வணிகவியல் புலத்தின் ஆசிரியர்களோ , மாணவர்களி ல் ஒருவராக நட்போடு விளங்கும் இள வயதினர் . துறைத் தலைவர் மதிப்பு மிகு முத்துராமன் தவிர்த்து அனைத்து ஆசான்களும் மாணவப் பருவத்தைச் சற்று முன்னர் கடந்து மாணவர்களோடு மாணவர்கள் போல தோழமை பாராட்டும் தூய மனதின ர் . அந்த நாளில் எங்களுக்கு வாய்த்த அப்படிப்பட்ட அன்பு ஆசான்கள் : திரு . திருநாவுக்கரசு அவர்கள் : கும்ப கோணத்தைச் சேர்ந்த ஆசான் திருநாவுக்கரசு அவர்கள் சிறந்த கவிஞர் , பன்முக ஆளுமை கொண்டவர் . இவர் வசித்த சிவன் கோவில் கிழக்கு வீதி இல்லம் எங்கள் அனைவருக்கும் சொந்த வீடு போல . எந்த நேரமும் அங்கே இருப்போம் எண்களில் ஒரு குழுவினர் ....