இடுகைகள்

கௌடின்யர்; ஃபூனான்;அகத்தியர்;சக ஆண்டு; காங் தாய்: மணிமேகலை: லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 29-இந்தோனேசியாவில் தமிழ் /இந்தியப் பண்பாட்டு பரவல்

படம்
  புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் தெய்வீக அரசாட்சி தென்கிழக்கு ஆசியாவில் இந்து சமயத்தினதும் இந்தியப் பண்பாட்டினதும் அறிமுகம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விளக்கும் பல தொன்மக் கதைகள் பல நாடுகளில் பரவி உள்ளன. இவ்வகை கதைகள் வெறும் மதப் புராணங்களாக மட்டுமல்ல; அரசியல் அதிகாரத்தின் தோற்றத்தையும் சமூக மாற்றங்களையும் விளக்கும் நினைவுக் கட்டமைப்புகளாகவும் அவற்றை அணுக வேண்டும். பெரும்பாலும் இத்தகைய மரபுகளை மூன்று பிரதான வழித்தடங்களாக வகைப்படுத்தலாம். 1. கௌடின்யர் மரபு – இந்தோசீனத் தொடக்கம் இந்தோசீனப் பகுதிகளின் ஆரம்பகால அரச மரபுகள் தங்கள் வம்சத் தோற்றத்தை “கௌடின்யர்” எனும் பிராமணருடன் இணைக்கின்றன¹. மரபுக் குறிப்புகளின்படி அவர் இந்தியாவிலிருந்தோ அல்லது மலாய் தீபகற்பப் பகுதியிலிருந்தோ கடல் மார்க்கமாக வந்ததாகக் கூறப்படுகிறது. கதைப்படி, பிரம்மனால் அருளப்பெற்ற தெய்வீக ஆயுதத்துடன் கௌடின்யர் கிழக்கே பயணம் செய்து, அங்கு ஒரு உள்ளூர் அரசனை வென்றார். பின்னர் “சோமா” எனப்படும் நாக அரசகுமாரியை மணந்தார்². இவ்விருவரின் இணைவிலிருந்தே அந்த நாட்டின் முதல் இந்து வம்சம் தோன்றியது எனக் கூறப்படுகிறது. “நாகா” என்பது ப...