அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 9 நீ நினைக்கும் போதை வரும் ....நன்மை செய்து பாரு..
அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 9 அன்பு சொந்தங்களே ... இந்தத் தொடரின் இந்த சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி பகுதியை ஆரம்பிக்கும் போதே டாக்டர்.நரசிம்மன் அவர்களும் டாக்டர் M.V .இராசகோபால் அவர்களும் தான் நினைவுக்கு வந்தனர். மருத்துவர் இராசகோபால் அவர்களிடம் நானே நிறைய பேசியிருக்கிறேன், கபடிப் போட்டிகள் நடத்துகிறேன் பேர்வழி என்று திண்ணன் செட்டி ஊரணியில் இருந்து சம்பந்தமே இல்லாத ஆர்ச் பகுதியில் அவரிடம் இருந்து நிறைய முறை நன்கொடை வாங்கி இருக்கிறேன். நன்கொடை என்று சொல்வதை விட முதல் பரிசு வழங்குபவர் நீங்கள் தான் என்று மொத்தமாக சரணாகதி அடைந்து இருக்கிறேன். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கையில் இருப்பதைக் கொடுப்பார். மீதம் போட்டி நடக்கும் நேரம் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கொஞ்சம் நாங்கள் பெருந்தன்மையாக வந்து விட்டு இங்கே போட்டி நடக்கும் நேரம் நான் பணம் கேட்டு அவர் வீட்டில் அமர்ந்து இருந்த நாட்கள் நினைவில் வருகின்றன. நோயாளி வந்து வைத்தியம் பார்த்து அவர்களுக்கு தன் செலவிலேயே மாத்திரை மருந்தும் கொடுத்து அவர்கள் கொடுக்கின்ற சிறிய கட்டணத்தையும் அப்படியே அவர் பைக்குப் போ...