இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-8. அருளா மருளா

படம்
  அருளா ?   மருளா ? ஆடி மாதம் என்றாலே நம்ம ஊரில் ஆடும் மாதம் தான் .   ஒவ்வொரு   தெருவிலும் அம்மன் கோவிலில் காப்புக் கட்டுவதில் ஆரம்பித்து கரகம் எடுப்பது , பூக்குழி இறங்குவது , அலகு குத்திக்   கொள்வது என்று அனைவரும் ' ஆடி ' க்  களிக்கும் மாதம் ஆடி மாதம் .   எனது பூர்வ புண்ணிய நகரம் தேவகோட்டை.  ஆடி என்றாலே அம்மனின் விழாக்களால் சும்மா ' அதிரும் '.   கல்லூரிக் காலம் , தேவகோட்டை அழகாபுரி நகரின் மூன்று வீதிகளும் , தெற்குதெரு , வடக்குத்தெரு , நடுத்தெரு என்று போட்டி போட்டு வைபவம் . தினமும் இரவு சாமி ஆட்டம் தான் . தெற்குத் தெருவில் நண்பர் பழனிச்சாமியும் வடக்குத்தெருவில் நண்பர் நாகராஜூவும் உடன்பிறவா சகோதரர்கள் .     வடக்குத் தெருவில் ' கொட்டுச் சத்தம் ’ …. ( மேளச்சத்தம் ) கேட்டு விட்டால் போதும் .. நகராஜுவின் அண்ணன் மணி சாமி ஆட ஆரம்பித்து விடுவார் .   ஆஜானு பாகுவான தேகம் , வாலிபப் பருவம் , நல்ல உடல் எடை ... மணி சாமி வந்து குதிக்க ஆரம்பித்தால் , யாராவது பின்னல்...

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-7.கல்யாணமாம் கல்யாணம்

படம்
கல்யாணமாம் கல்யாணம்   குடும்பத்திலோ , நட்பு வட்டாரத்துடனோ , கல்லூரி வகுப்புத் தோழர்களுடனோ , ஒரு குழுவாக நிழற்படம்   (GROUP PHOTO ) எடுத்து அது உங்கள் பார்வைக்கு வந்தால் ... முதலில் உங்கள் கண்கள் தேடும் உருவம் யாராக இருக்கும் .   சத்தியமாக உங்கள் மனமும் கண்களும் அத்தனை பேர் மத்தியிலும் உங்கள் உருவத்தைத் தான் தேடும் .  அதுபோலத் தான் இந்தத் தொடரிலும் எங்கே எதனைப் பார்த்தாலும் , உடனே மனம் நினைப்பது எனது தாய் மண் தமிழகத்தைத் தான் . பயணக் கட்டுரைகளின் முன்னோடிகள் பலர் . உலகம் சுற்றிய தமிழன் , இதயம் பேசிய மணியன் என்று இமயமாய் நிற்பவர் முன் எவரும் சிற்றெறும்பே !!.  இங்கேயே ஆண்டுகள்   கணக்கில் தங்கி விட்டதால் , அவ்வப்போது மனதில் பதிந்த காட்சிகளை , எண்ணத்தில் ஓடி உறங்கிய நினைவுகளை என் திரு நாட்டு நினைவுகளோடு மீள் பார்வையாகப் பார்க்கிறேன் .. உங்கள் அன்பும் அரவணைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் . வரலாற்றில்   ஆர்வம் .  இங்கிருந்த பழங்கால அரசுகளைப் படித்து ...