இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிலம்பணி சிதம்பர விநாயகர்-அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 13

படம்
  அன்பு சொந்தங்களே ... சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதியை விட்டு ஏனோ அகல முடியாவில்லை . எவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முற்பட்டாலும், 'கடுகினைத் துளைத்து கடலினைப் புகுத்திய வகையில் ஒண்ணே முக்கால் அடியில் உலகத்தையே காட்டும் வள்ளுவன் குறள் போல ஏகப்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் ஆளுமைகளையும் இந்த சன்னதி தெரு தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது. ஆதலால் தான் எளிதாகக் கடந்து சென்று விட இயலவில்லை. முடிந்த வரை சுருக்கமாகவும், முக்கிய செய்திகள் விடுபட்டு விடாமலும் பார்த்துக்கொள்கிறேன். சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலயம் இப்ப சிலம்பணி சன்னதி தெருவில் இருந்த மக்களை ஓரளவு பார்த்தோம். இந்தச் சன்னதியின் சந்தோசமாய், சங்கடம் தீர்க்கும் சக்கரவர்த்தியாய், சகலரும் வணங்கும் சிலம்பணிந்த பாதம் கொண்ட சிதம்பர விநாயகர் பற்றிய செய்திகளை அசை போட்டு விட்டுக் கடப்போமே... தனுசுகோடியில் "வீ யார்' VR சத்திரம் என்று மிக வசதிகளுடன் கூடிய 24 மணி நேரமும் அணையா அடுப்புடன் விளங்கி இராமேசுவரத்திற்கு , இராமன் வழிபட்ட ஈசுவரனை தரிசிக்க வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் சுவையுடன் வழங்கி வருவதற்காக நிர்மாணிக்கப் ப...

சாண்டில்யன்...... அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 12

படம்
 அசை  போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 12 அன்பு சொந்தங்களே ... சாண்டில்யன்...... சாண்டில்யன் - வரலாற்றுப் புதினங்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களால் இந்தப் பெயரை மறக்கவே முடியாது.  "ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்''.   இப்படிச் சொன்னவர், அமரர் சாண்டில்யன் சரித்திர கதைகளின் நாயகன் அமரர் சாண்டில்யன்  எத்தனையோ தமிழரை தஞ்சைத் தரணியின் இராசேந்திர சோழனின் கடற்படையில் ஒருவராக இணைத்துக்கொண்டு கலிங்கத்தில் பாய் மரத்தை உயர்த்தி விரித்து நக்காவரத் தீவுகளில் (நிக்கோபார் ) இறக்கி இளைப்பாற வைத்து பின்  இன்றைய இந்தோனேசியத்  தீவுக்கூட்டங்களிடை மரக்கலன்களை செலுத்தி சாவகம், புஷ்பகத் தீவுப்  பெண்களைக்  கண்டு இரசித்து கடாரத்தின் கரைகளில் படாக்கு  இனத்தாரோடு உறவாடி ஸ்ரீவிஜய மன்னரோடு பொருதித் தண்டனிட வைத்து மின்னும் பொன்னும் இன்னும் பொருளும்  கொண்டு தமிழகக்  கடற்கரையில் இறக்கி ...

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ??!! - அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 11

படம்
  அன்பு சொந்தங்களே ... பழங்கதை பேசி மார் தட்டிக் கொள்வது ஏற்புடையதா என்ற ஓர் கேள்வி அடிக்கடி நம்முள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.   வீண் என்று சொல்லும் வேதாந்திகளும் உண்டு.   வெந்ததை தின்று விதியே என்று கிடப்போர்க்கு இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் ஒரு வேறுபாடும் இல்லை .   ஆனால் துவண்டு, நைந்து, நொந்து நூடுல்ஸ் ஆனவர்களை 'ஐயா, எழுந்திரு ..... சிங்கம் நீ... இன்னாரின் வழித்தோன்றல் நீ.. ஆளப்பிறந்தவன் நீ... அழப் பிறந்தவன்   அல்ல ...' என்று தன்   வலிமை தனக்கே தெரியாத தம்பியருக்கும்   தங்கையருக்கும் அவரவர் உயரம் இத்தகையது என்று எடுத்து இயம்ப நமது முன்னோரின் தோள்   வலியும், துஞ்சா உழைப்பின் வழியும், அவர்தம் நுண்மாண் நுழைபுலம் பற்றியும் பேச வேண்டி இருக்கிறது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என மறைந்த நடிகர் விவேக் அவர்கள் பாணியிலே ஒரு முறை சொல்லிப் பார்த்துக்   கொள்ளவே தோன்றுகிறது.   உண்மையில் நாடு பற்றி பேசும் முன் நமது நகர் பற்றி பேசுவோம்.    ஒரு இரண்டு தலைமுறை இடைவெளியில் வலிமையில் வனப்பில் மலிந்தோமோ, நலிந்தோமோ, உயர்ந்தோமோ என...