இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 18; சத்திய சோதனை

படம்
  அன்புச்   சொந்தங்களே .... அந்த மாணவனுக்கு கல்வி என்ற பெயரில் நெட்டுருப் போட்டு, ஏட்டில் இருப்பதை மூளைக்குள் பதிவு செய்து வேண்டிய பொழுது விடைகளாக தேர்வுத்தாளில் வாந்தி எடுத்து நல்ல மதிப்பெண் வாங்கி நல்ல மாணவன் என்ற பெயர் எடுக்கும் நடை முறை கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை.   கல்வி என்பது கலைமகள் கைப்பொருள் என்றால் மற்ற கலைகள்   என்ன மாற்றான் தாய் மக்களா?   என்ற எண்ணம்.   வானம்பாடியாய் பறந்து, குயிலாய்ப்   பாடி, மயிலாய் ஆடி, ஒயிலாய் நடக்கும் நடிப்பு ஒன்றே மனத்துக்குப் பிடித்து இருந்தது.   தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப்பள்ளி... அறிவாற்றல் மிகுந்த பல மாணாக்கர்களுக்கு மத்தியில் இந்த மாணவனுக்குள்   மரபணுவில் உறங்கிக் கொண்டிருந்த கலைஞன் எழுந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செல்ல இயலாமல் பாடாய்ப் படுத்திக்கொண்டு இருந்தான்.                                                  நான் 1969 ஆம் வருடம் தேவகோட்டை சைவப்பிரகாச வித்தியா சாலைய...

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 17; நீதி அரசர் கற்பக விநாயகம்

படம்
  அன்புச் சொந்தங்களே ... எனது தொடக்க மற்றும் உயர்நிலைப்   பள்ளி மாணவப் பருவத்தில் ஒரு நண்பன்... அவர் பெயர் திரு.கோபால்.    எனது நண்பர்களும்   பின்னர் உறவினரும் ஆன   தேவகோட்டை தமிழ்க் கொண்டல் ஆ .குமார் , திரு.இராஜகோபால் என்ற ஆசைத்தம்பி (மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் அங்குச்சாமியின் தம்பி) இவர்கள் எல்லாம் ஒரு குழு. இதில் எங்கள் திண்ணன் செட்டி   ஊரணிப்   பகுதியில் இருக்கும் ' மாணிக்க வித்தியாசாலை ' பள்ளியின் சார்பாக கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளியின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக நாடகங்கள் நடத்துவார்கள்.   இதில் இந்த கோபால் மற்றும் ஆ . குமார் அதிகமான   ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.   நானெல்லாம் ஒத்திகையை வேடிக்கை பார்க்கிற வெட்டியானவன்.    இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் இந்த கோபால் மாணிக்க வித்தியா சாலையின் மாணவர் அல்ல.   ஆனால் அரங்கத்தின் ஆர்வத்தால் மட்டுமே இங்கு வந்து நடிப்பார்...   அவரது தொடக்கப்பள்ளி காந்தி ரோடில் நான் பயின்ற அதே புனித ஜான்ஸ் பள்ளி.   அவரது இல்லம் அன்றைக்கு இருந்த இடம் தேவகோட்டையில் பழைய சருகண...

அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 16: சிகரங்களின் அகரம்

படம்
  அன்புச் சொந்தங்களே ...   கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகள்   நமது நகரின் பழைய சரித்திரத்தில் மறக்கப்படக்கூடாதவை என்கின்ற ஒரே காரணத்தால், திரும்ப சன்னதி தெரு வரை ஒரு நடை உங்களை அழைத்து வந்தேன்.   பிடித்தவர்கள் மகிழ்வீர்கள் என நம்புகிறேன்.    அறுவை என்றும் அதிக நீளம் என்றும்   நினைப்போர் இந்தப் பகுதியை வாசிப்பதை தவிர்க்கலாம்.   இந்த சிறிய சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி, நிறைய விஷயங்களை உள்ளடக்கி வைத்து இருக்கிறது.   ஒரு வழியா அந்த இடத்தை விட்டு நீங்கி வெள்ளாளர் தெருவில் நடை போட்டோம். சன்னதி தெருவைப் பற்றிய நினைவுகளை அசை   போட்ட போது இந்த சன்னதி தெருவில் நடை பெரும் தியாகப் பிரம உத்சவம் பற்றிக்   கொஞ்சம் நினைவு கூர்ந்தோம்.   ஆனால், இந்த விழாவில் வந்து கலந்து கொண்டவர்   பற்றிய விபரங்ககளை அறிந்தும்   அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் கடந்து செல்வது இந்தத் தொடருக்குச் செய்கின்ற துரோகம் என்ற குற்ற உணர்வு அதிகமாக வாட்டியதால் அப்படியே   மீண்டும் ஒரு நடை சன்னதி தெருவுக்கு ( " U turn" அடித்து ?) வந்து விட்டேன். ...