அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 21 முள்ளிக்குண்டு பேருந்து எரிப்பு வழக்கு
அன்புச் சொந்தங்களே .... சென்ற பகுதியில் நமது நகர் நீதி அரசரை மற்றும் அவரது வழக்கறிஞர் குழாம் தன்னை மக்கள் திலகம் அவர்களது தி.நகர் இல்லத்தில் அமர வைத்து விட்டு வந்து விட்டோம். இப்போது அங்கு செல்வோம். இவர்கள் எல்லோரும் தி.நகர் இல்லத்தில் அமர்ந்து எம்.ஜி.ஆருக்காக காத்து இருந்த போது அவர் திருப்பரங்குன்றம் கிளம்பிக் கொண்டு இருந்தார். அரசியல் வாழக்கையில் உச்சகட்டக் காட்சியாக பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றி மிகப்பெரும் தனிக்கட்சியாக ஆட்சிக்கட்டிலில் ' தனிக்காட்டு ராஜாவாக ' நின்ற தி.மு.க. என்னும் பெரிய கோட்டையில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்ட நேரம்... அவரது இரசிகர்களை தொண்டர்களாக மாற்றிய காலம். இவர்கள் தனக்காக காத்திருந்ததைக் கண்டு அவர்களுடன் அமர்ந்து உரையாடினார். வழக்கறிஞர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப் பட்டதற்கு கன்டனம் தெரிவிக்கும் வண்னம் சென்னை அண்ணா சிலை அருகே உண்ணா நோன்பு இருக்கப் போவதாக அவரிடம் தெரிவித்தனர். தனக்காக யாரும் சிரமப்பட வேண்டாம் என்பதில் எம்.ஜி.ஆர். கவனமாக இருந்...