இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-3.அட... நம்ம 'பல'காரங்கள்

படம்
  அட... நம்ம 'பல'காரங்கள்                                               மல்லிகைப்பூ இட்லி , மணக்கும் சாம்பார் .... நான் நாக்கை நம்பி வாழும் ஜீவன் அப்பா என்று ' அன்பே வா '   திரைப்படத்தில் நாகேஷின் பின்னால் இட்லி சாம்பாருக்காக அலையும் நடிகர் T .R. இராமச்சந்திரனைப்   பார்த்தால் சூடான இட்லி , அதற்குத் துணையாய் சாம்பார் , பக்கத்திலேயே சட்னி என்று நமது தமிழக உணவு எவ்வளவு நம் உணர்வோடு கலந்து விட்டது என்பது தெரியும் .   எண்ணெய் படாமல் ஆவியில் வெந்து நம் ஆவியில் கலந்து விட்ட இட்லி நமது பாரம்பரிய உணவு என்று இறுமாந்து இருந்த எனக்கு , இங்கே இந்தோனேசியா தான் இட்லியின் பூர்விகம் , இந்தோனேசியாவைப் பிறந்த இல்லமாகக் கொண்ட ' கெட்லி ' தான்   ஊர் மாறி பேர் மாறி இங்கே ' இட்லி ' ஆகி விட்டாள்   என்ற   ' உணவு வரலாற்று ஆசிரியர் திரு .K.T. ஆச்சார்யா ' அவர்களின் கூற்றை இட்லி மேல் கொண்ட மோகத்த...

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) - 2.தோரணம்

படம்
  தோரணம்     வாரண மாயிரம் சூழ வலம்செய்து , நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர் , பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் , தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான் . மங்கள விழா என்றால்   வீதி முழுக்க தெரியும் வண்ணம் , ஊர் முழுக்க அறியும் வண்ணம் ' தோரணம் ' கட்டுவது பண்டைய காலம் முதல் தமிழர் தம் வழக்கமாய் இருந்து வருகிறது .   ' ஜனுர் ' (JANUR) முதன் முதலில் இந்தோனேசியாவில் இந்த குருத்தோலை தோரணத்தை சாவகத்தில் ( ஜாவா ) திருமண மற்றும் அரசு நிகழ்வுகளில் கண்டதும்   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தோரணம் நாட்டிய   வீதிகளை கனவில் கண்ட கண்களோடு விழித்து அவள் மனதில் எழுந்த மேற்கண்ட பாசுரம் தான் என் மனதில் நிழலாடியது .   பெஞ்சோர் (PENJOR) சாவகத் ( ஜாவா ) தீவின் கிழக்குக் கோடியில் அமைந்து இருக்கின்ற பாலி (BALI),   ஜாவா மற்றும் சுண்டா இன   மக்களால் இன்றும் சமய   நிகழ்வுகளுக்கும் , திருமண நிகழ்வுகளுக்கும்   ' ஜனுர் ' (JANUR) என்று அழைக்கப்படும் ...