இடுகைகள்

நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

18.கலிங்கத்துப் பரணி

படம்
  18.     கலிங்கத்துப் பரணி தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- அன்புத் தமிழ்ச் சொந்தங்களே .....   எகிப்தில் இருந்து கடல்   வணிக வழிகளை கி.பி. 60 ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட 'The Periplus of the Erythraean Sea' எழுதப்பட்ட நூலில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விவரங்களைக் கொண்டு அறியலாம்.   பாரதத்தின் துறை முக நகரங்களின்   முதல் நூற்றாண்டு கால வடிவங்களை நமது கண் முன்னே காட்சிகளாய் விரிக்கும் இந்த வரிகளைப் பாருங்கள். இறக்குமதிச் சந்தைகள் நிறைந்த   பெருந் துறைமுகங்களில் 'தமிரிகர்' (தமிழர்) மற்றும் வட நாடுகளில் இருந்து வந்திருந்த கலங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.     இவற்றில் முக்கியமாக, தமிரிகா (தமிழகம்) கரையோரம் உள்ள   ( வரிசைக் கிரமப்படி...) சமரா/CAMARA   (பூம்புகார்), அடுத்து   போதுகா/PODUCA (புதுச்சேரி )பின்னர் சோபாத்மா /SOPATMA  (மரக்காணம்)   பகுதிகளின் கடற்கலங்கள்.   அவற்றில் மிகப்பெரிய தடி மரங்களை பிணைத்துக் கட்டப்பெற்ற  ...

17.புத்தம் சரணம் கச்சாமி....தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

படம்
  17. புத்தம் சரணம் கச்சாமி ....     தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- அன்புத் தமிழ்ச் சொந்தங்களே ..... இன்றைய இந்தோனேசியாவினுடனான அன்றைய பாரத, தமிழகத் தொடர்புகளை மிகச் சுருக்கமாக அறிவதற்கு   இரண்டு பூகோளப்பகுதிகளின் சரித்திர நிகழ்வுகளையும், அந்தந்தக் கால கட்டத்தின் அரசுகளைப் பற்றியும், கிடைக்கும் ஆவணங்கள், அகழ்வாய்வுத் தகவல்கள் இவற்றைக் கொண்டு மீளவும் அந்தக் காலத்திற்கும் தூரத்துக்கும் பயணப்படுவதே இந்தத் தொடர்.   இயன்றவரை மிகக்குறைவாகவே நிகழ்வுகளின் நிழல்களைத்     தொட்டு வருகிறோம்... தலைவலி வராமல் தவிர்க்கும் முகமாக..   இன்றைக்கு நாம்   காண்பது போல அல்லது இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்தது போல பல்வேறு மதங்கள் மக்களிடம் அன்று இல்லை.   மதம் என்னும் மதம் பிடிக்காத இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர் தென்னாடு என்னும் பொன்னாடு பெற்ற தமிழர்.   வடக்கிலிருந்து வழுக்கி இங்கே தென்னாடு சேர்ந்த மதங்கள், 1.பிராமண மதம், 2.சிரமண மதம் என்று இரண்டு பெயர்களில் வழங்கப்பட்டது. பிராமணம்...