19. மனு நீதிச் சோழன்... மகாராணி ... சிமா (SHIMA )

19. மனு நீதிச் சோழன் ... மகாராணி ... சிமா (SHIMA ) தென் கிழக்கில் .. தெக்கத்தியான் ( தெற்கத்தியான் ) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது - மனு நீதிச் சோழன் ... தமிழர்கள் அனைவருக்கும் நீதி பரிபாலனம் என்றால் நினைவில் வரும் கதை கன்றாடிய மணி ஓசைக்குத் தன் நெஞ்சில் நின்றாடிய மகனை தேர்க்காலில் பலி கொடுத்த நேர்மையும் சீர்மையும் . இன்றைய கால கட்டத்தில் இது சாத்தியமா என்று எண்ணுவது இயல்பு . இறந்து பட்ட பசுவுக்காக தனக்கு பிறந்து விட்ட மகனைக் கொல்வது என்பது தாயை இழந்த சோகத்தை கன்று அனுபவித்ததைப் போல மகனை இழந்த சோகம் தனக்கு வர வேண்டும் என்பதே நீதி என்று அவன் நினைத்து இருக்க வேண்டும் . அதை விட நாட்டின் காவலனாக இருக்கும் தனது பூமியில் மக்களும் நீதி தவறாத நெறி முறையில் வாழ வேண்டும் என்பது அவனது தீர்மானம் . கலிங்க தேசம் ... 7 ஆம் நூற்றாண்டு .. வெளி நாட்டில் இருந்து ஒரு இளவரசன் நாடுகள் பல சுற்றி வரும் வேளை கலி...