இடுகைகள்

அக்டோபர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 67

படம்
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 29-10-2018 பகுதி: 67 அன்புசொந்தங்களே ... இந்த பகுதி பதிவில் ஏறியவுடன் அன்பு ஆசிரியர் திரு.பத்மநாபன் அவர்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருந்து தொலை  பேசியில் அழைத்தார்.  விட்டுப்போன செய்திகளை விவரித்தார். அவற்றை பிற் சேர்க்கையாக  கீழே கொடுத்து இருக்கிறேன்.  அப்படி இல்லாமல் எனது பதிவை அப்படியே திருத்தினால், நிகழ்வுகளை நினைவில் சுமந்து இந்த தொடரில் சரித்திரப் பிழை வந்து விடாமல் காப்பாற்றிய நல்ல இதயங்களுக்கு நன்றி தெரிவிக்க இயலாமல் போய் விடும்.  எனக்கு பல செய்திகளையும் அவ்வப்போது தந்து என்னை ஊக்குவிக்கும் ஆசிரியர் திரு.பத்மநாபன் பாதார விந்தங்களில் பணிந்து என் நன்றியினை இந்தப் பதிவினில் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர் மூலம் அறிந்தவை: எனது பதிவில் கண்டது போல தேவகோட்டையில் நடத்தப்பெற்ற ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட மாநாட்டுக்குக்  கடைசி நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்களால் வர இயலவில்லை.    கலைஞர் கலந்து கொண்டார்  மாநாட்டுக்குத் தலைமை ஏற்றது அன்றைய முகவை மாவட...

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 66

படம்
அசை   போடும்   ..தேவகோட்டை   ஞாபகங்கள் கவிக்கிறுக்கன்   முத்துமணி 19-10-2018 பகுதி:   66 அன்புசொந்தங்களே ... இடைத் தேர்தல் என்பது எப்போதுமே கொஞ்சம் சிக்கலானதுதானே.    பெண்களின் இடைத்தேர்வு ஆகட்டும் , மக்கள் மன்ற இடைத்தேர்தல் ஆகட்டும்... இரண்டிலுமே வலிவு பெற்றவர்கள் பொலிவு பெறுவார்கள்.   பணபலமோ , படை பலமோ...   அதனால் தான் சில இடைத்தேர்தல்களில் , வளர்ந்து வரும் புதிய காட்சிகள் வெற்றி பெறுவது என்பது மக்களின் உண்மை உணர்வை பிரதிபலிப்பதாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் 1958 இல் நமது தொகுதியில் நடை பெற்ற   இடைத்தேர்தல் முடிவுகளுக்காக எதிர்பார்ப்போடு இருக்கிறீர்கள் என்றுஅறிவேன்.   இடைத்தேர்தலில் நடராஜத்தேவரும் , ஆதங்குடி   பிச்சுக்குட்டி உடையார் அவர்களும் திரு.வலமாவூர் கிருட்டிணத் தேவரை ஆதரித்தனர். கலைஞர் அவர்கள் பாணியில் இவர்கள் எல்லாம் ஓர் அணி , திரு.கரியமாணிக்கம் அவர்களும் திரு.இராம வெள்ளையன் அவர்களும் தனி. காமராஜரின் ஆளும்   காங்கிரசின் சார்பில் தேவர்.   பதவியை தக்க வைக்க அம்பலார்.   கட்சியினை வளர்...