இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 64

படம்
அசை   போடும்   ..தேவகோட்டை   ஞாபகங்கள் கவிக்கிறுக்கன்   முத்துமணி 29-09-2018 பகுதி:  64 அன்புசொந்தங்களே ... கடந்த வருடம் செப்டம்பர்  26  ஆம்  அன்று எழுதப்பட்ட இந்த  ' அசை போடும் தேவகோட்டை நினைவுகள் '   தற்போதும் மீள் பதிவாக புதியதாக நமது நண்பர்களால்  வாசிக்கப்பட்டு புதியது போல இன்றும் முகநூலில் பின்னூட்டங்கள் வருவது மகிழ்வாய் இருக்கிறது.  சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி என்கிற சி.ஆர் . என்கிற  இராஜாஜி அவர்கள் நமது தமிழக ,  இந்திய தேசிய வரலாற்றில் மிக முக்கிய அதி புத்திசாலியான  தலைவர்.  அவர் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர் வேறு திசையில் பயணப்பட்டு விடும்.  ஆயின் ,  நமது அடுத்த தலைமுறைக்காக அவர் பற்றிய சில ருசிகரமான அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை மட்டும் பதிவு செய்கிறேன். சக்கரவர்த்தித் திருமகன்,  வியாசர் விருந்து என்ற தலைப்புக்களில் இராம காதையையும், மகாபாரதத்தையும் தமிழில் வடித்தவர் இவர்.  திண்ணன் செட்டி ஊரணிக் கரையில் ...

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 63

படம்
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் கவிக்கிறுக்கன் முத்துமணி 26-09-2018 பகுதி: 63 அன்புசொந்தங்களே ... விளையாட்டு போல சென்ற வருடம் செப்டம்பர் மாதம், தேவகோட்டையில் நவராத்திரி கொலு  வைபவம் பற்றி ஒரு சிறு குறிப்பாக எழுதினேன்.  உங்களின்  அன்பு மனங்கள் பின்னூட்டங்களில் தீவிரம் காட்டியதிலும், எத்தனையோ உள்ளங்களின் அடியிலும் இதே உணர்வும், தாய்த்திரு நகரின் நினைவுகள்  தேங்கிக் கிடப்பதையும் கண்டு என்னையும் அறியாமல் தொடராக எழுதும் வண்ணம் திருவருள் அமைந்து விட்டது.  திரும்பிப் பார்த்தால் இந்த ஒரு வருட காலத்திற்குள் 63வது பகுதியில் (EPISODE )இல் நிற்கிறோம். இது உங்கள் வெற்றி .. நம் உறவின் வெற்றி... நகரின் நினைவுகள் எனும் ஒரே நூலில் கட்டிப்போடப்பட்டு இருக்கும் உடன் பிறப்புகள் நாம் அனைவரும் என்ற எண்ண அலைகளின் வெற்றி.   என்ன….. சில மாதங்களில் 4 அல்லது 5 பகுதிகள் கூட எழுத இயன்றது.  இந்த ஜூன் 2018க்கு பின் கொஞ்சம் தொய்வு விழுந்து விட்டது.  அதற்கு தலையாய காரணம் பணிச்சுமை மட்டும் அல்ல.  எழுதுகின்ற பகுதிகளின் சூழலும், காலமும் ஆகும்.  மேலெழுந...

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 62

படம்
அசை   போடும்   ..தேவகோட்டை   ஞாபகங்கள் கவிக்கிறுக்கன்   முத்துமணி 10-09-2018 பகுதி:  62 அன்பு நண்பர்களே! என்னடா இது.. மதுரைக்கு வந்த சோதனை ? என்று திருவிளையாடல் திரைப்பட டி.எஸ்.பாலையா மாதிரி   அகி விட்டது என் நிலைமை.   இடையில் அலுவலகம் விட்டு இல்லம் நோக்கி வரும் வழியெல்லாம் நல்ல நாளிலேயே தில்லை நாயகமென ஒரு காலில்   நகரும் ஜகார்தா போக்குவரத்து , ஆசியான் விளையாட்டு என்ற அமர்க்களத்தில் சுத்தமாக சாலைகள் மாற்றி மடை மாற்றம் செய்யப்பட்டுஆமையாக   ஒரு இரண்டு வாரம் நகர்ந்தது . எழுத வேண்டியதை எல்லாம் மகிழுந்தை இயக்கும் போது   மனதில் அசை போட்டு விட்டு அலுவலகத்தில் நுழைந்தால் அங்கே ஏகப்பட்ட பேய்கள் தலையை விரித்துப் போட்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றன.    ஒரு வழியாக கோடங்கி   அடித்து , வேப்பிலை விசிறி ஒண்ணொன்னா அடக்கி வைப்பதற்குள்   இரவு வந்து விடுகிறது.   திரும்பவும் மகிழுந்தில் மனதிலேயே தொடரின் அடுத்த பகுதியையே எழுதி இல்லம் வந்ததும் எழுத அமரலாம் என்றால் , பகல் முழுதும் பேய் ஒட்டிய களைப்பு ஆளை   அம...