இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

16. தோல் பாவை நிழற் கூத்து.... - சாவக வயாங் கூளித் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

படம்
  16. தோல் பாவை நிழற் கூத்து.... - சாவக வயாங் கூளித் தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் ,,, பாவைக் கூத்து இங்கு இந்தோனேசியா வந்து சேர்ந்த புதிதில், ஒரு முக்கிய சாலையைக் கடந்த போது   போக்குவரத்து அந்தச்சாலையில் தடை செய்யப்பட்டு இருந்தது. என்ன காரணம் என்று விசாரித்தேன்.   'அந்தப் பகுதியில் 'உபச்சாரா' நடந்து கொண்டு இருக்கிறது. அந்த உபச்சாராவின் ஒரு பகுதியாக 'பாவை' வருகிறது, அதனால் இந்தச்சாலை இப்போதைக்கு மூடப்பட்டு இருக்கிறது', என்றார்கள்.   'உபச்சாரா' , 'பாவை' என்பதெல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்ட மாதிரியே ஒரு பிரமை ஆனால் மனதுக்குள் புரியவில்லை.   நானும் ஒரு 'பாவை' போலத் தலையை ஆட்டி விட்டு மாற்றுப் பாதையில் வழி   தேடித் சென்று விட்டேன்.   இது நிகழ்ந்தது ஆகஸ்டு மாதம், 1988 ஆம் வருடம் கீழைச்சாவாகத்தின் சுரபயா நகரில். PAWAI-INDONESIAN CULTURAL PARADE மனம் மட்டும் ''உபச்சாரா' வையும், 'பாவை' யையும் நினைத்துக் கொண்டிருந்தன.   ...

15.பல்லவ இராஜ சிம்மன் - சாவக தேவ சிம்மன் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

படம்
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது   15.பல்லவ இராஜ சிம்மன் - சாவக தேவ சிம்மன் அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம் ,,, தமிழகத்தில் 'அகத்தியம்' என்னும் மொழி இலக்கணம் வகுத்த அகத்தியரை கடல் கடந்து இங்கே சாவகத்தில் சந்தித்தோம்.   இந்தத் தொடரைத் தொடங்கும் முன்னரே ஒரு முன் மொழி. நமது இந்தத் தொடர் இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் நமது பாரத நாட்டின், தமிழகத்தின், நமது இனத்தின் தொடர்பின் வேர்களைத் தேடி நம்முள் பகிர்ந்து கொள்ளும் ஒரே நோக்கத்தோடு தான் ஆய்வுகளின்   அடிப்படையில் எழுதப்படுகிறது.   சரித்திரச் சான்றுகள் என்ன இருக்கிறதோ அதை அப்படியே இங்கே குறிப்பிடுகிறேன்.   அந்தந்தக் கால கட்டத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப மொழி ஆதிக்கம் நிகழ்ந்து இருக்கிறது.   இன்றைய கால கட்டத்தின் கண்ணோட்டத்தோடு பல நூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளை நோக்கக் கூடாது.   நமது விருப்பு வெறுப்புகளுக்கு எந்த வகையிலும் இடம் அளிக்காமல் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இந்தப் பதிவு நீள்கிறது. பல்லவர் பற்றி பெருமை பேசும் அதே வேளையில் பல்லவர் சமக்கிருதத்துக்கே முன்னிலை ...

14.அகத்தியம் - தமிழகம்- சாவகம் - தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)

படம்
  14 .   அகத்தியம் - தமிழகம் - சாவகம் உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும் முப்பத்து முக்கோடி தேவரும் இமயத்தில் உமையவள் திருமணம் காணச்செல்ல வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்த போது அதனைச் சமன் செய்ய அகத்தியர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பயணமாவார்.   அந்தப்   பயணத்தின் போது அகத்தியர் பாடிக்கொண்டு வருவதாக ‘அகத்தியர்’ திரைப்படத்தின் இயக்குனர் A.P.நாகராஜன் அமைத்து இருந்த காட்சிக்கு புலவர் உளுந்தூர் பேட்டை சண்முகம் மேற்கண்ட பாடலை எழுதி இருப்பார். தென்னகம் நோக்கி வந்த அகத்தியர் நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் வாழ்ந்ததாகவும், என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமான தமிழுக்கு 'அகத்தியம்' எனும் முதல் இலக்கண நூல் வடித்த மிகப்பெரும் சித்தர் என்று நமது பாரம்பரியம் கூறுகிறது.    தொல்காப்பியர் இவரது மாணவர் என்றும் சொல்லப்படுகிறது.   அறிஞர் அண்ணா, உளுந்தூர் பேட்டை சண்முகம் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்  முச்சங்கங்களும் ஒப்புக்கொள்ளும் இலக்கண நூலான அகத்தியம் இயற்றமிழுக்கு மட்டும் இலக்கணம் வகுக்கவில்லை. இசை, நாடகம் உள்ளிட்ட மூன்...