'காமராஜ'ரும்... 'இந்திரா' வும்- தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள்

தேவகோட்டை கந்தன் விழா நினைவுகள் 'காமராஜ'ரும்... 'இந்திரா' வும் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் சரி , புலவர் கீரனும் சரி ... தமது சொற் பெருக்கின் இடையே அன்றைய கால கட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து இலை மறை காய் மறைவாய் பகடி செய்வது உண்டு . அது 1971 ஆம் வருடம் .... இதற்கு முன் ஒரு செய்தி முன்னோட்டம் : பாரத நாடு அரசியல் களத்தில் நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி அம்மையாரை பலரின் கிண்டல்களையும் மீறி அரியணை அமர்த்தியதில் பெரும் பங்கு கொண்டவர் தமிழகத்தின் கர்ம வீரர் காமராசர் . 1969 ல் இந்திய தேசிய காங்கிரசில் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் காமராஜர் , மொரார்ஜி தேசாய் , எஸ் . நிஜலிங்கப்பா ஆகிய காங்கிரசின் முன்னணி தலைவர்களால் உருவாக்கப்பட்ட “ சிண்டிகேட்” குழுவுக்கும் பலப்பரீட்சை நடந்தது . சிண்டிகெட் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் குற்றம் சாட்டியும் , வாரிசு அரசியலை எதிர்த்தும் பிரதமர் இந்திரா காந்தியை நவம்பர் 1969 ல் ...